இலங்கையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள பிரச்சினை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த அமைச்சரவை உப குழுவி பரிந்துரைத்த, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கான தீர்வை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கான தீர்வை, எதிர்வரும் வரவவு செலவு திட்டத்தின் மூலம் கட்டம் கட்டமாக செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.