இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை – போர்ட் சிட்டிக்கு $300 மில்லியன் முதலீடு

Colombo Port City’s master developer, CHEC Port City Colombo (Pvt) Ltd, has committed approximately USD 300 million in foreign direct investment to advance Phase Two of Sri Lanka’s largest urban development project, reinforcing confidence in the country’s long-term economic growth.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை – போர்ட் சிட்டிக்கு $300 மில்லியன் முதலீடு

கொழும்பு போர்ட் சிட்டியின் முதன்மை மேம்பாட்டாளரான CHEC போர்ட் சிட்டி கொழும்பு (Pvt) Ltd நிறுவனமானது, திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுப்பதற்காக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) வழங்க உறுதியளித்துள்ளது.

இந்தப் புத்தாண்டுத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முதலீட்டு உறுதிப்பாடானது, இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தேவையான ஒழுங்குமுறை நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள் தொடங்கவுள்ளன. 

இந்த 300 மில்லியன் டொலர் முதலீடு, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் CHEC நிறுவனத்திற்கு உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இது குறித்து CHEC போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷியோங் ஹாங்ஃபெங் (Xiong Hongfeng) கூறுகையில்:

"இந்த 300 மில்லியன் டொலர் முதலீடு என்பது இலங்கை மீதான எங்களது நீண்டகால உறுதிப்பாட்டின் தெளிவான அடையாளமாகும். போர்ட் சிட்டி திட்டத்தை நாங்கள் ஒரு குறுகிய கால மேம்பாடாகப் பார்க்கவில்லை. மாறாக நாட்டின் எதிர்கால வளர்ச்சியோடு இணைந்த ஒரு தலைமுறைத் திட்டமாகவே கருதுகிறோம். இலங்கையின் பொருளாதாரப் பாதை மற்றும் முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் போர்ட் சிட்டி வகிக்கப்போகும் முக்கிய பங்கு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையையே எங்களது இந்த மூலதன முதலீடு பிரதிபலிக்கிறது," என்றார்.

இரண்டாம் கட்ட முதலீடானது, இலங்கையின் முதலாவது பன்முக சேவை விசேட பொருளாதார வலயமான (SEZ) போர்ட் சிட்டியினுள் உள்ள முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரிப்பதுடன், கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளில் நிலையான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.