ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர் வைணவ ஆச்சாரியர் ஸ்ரீராமானுஜர். இவர் காஞ்சிபுரத்தில் வளர்ந்தார். ஸ்ரீரங்கத்தில் பல்வேறு தொண்டுகளை செய்தார். உலக சமத்துவத்திற்காக பாடுபட்டார்.
வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் அவரது சிலை தெலுங்கானா மாநிலை ஐதராபாதில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தாமரை மலர் மீது தியானமுடன் அமர்ந்த நிலையில் ராமானுஜர் சிலை, 45 ஏக்கரில் ரூ 1,000 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் 120 கிலோ தங்கம் சேர்த்து பஞ்சலோகங்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.
வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும் கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த சிலையானது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிலை என்ற பெருமையை பெறுகிறது.
இந்த பெருமை மிகுந்த சமத்துவத்திற்கான சிலை என அழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.30 மணி அளவில் திறந்துவைத்தார்.