Photo by cottonbro from Pexels
கொரோனா காரணமாக தரம் ஆறு மாணவி உயிரிழந்ததை அடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH) பணிப்பாளர் ஜி. விஜேசூரியா, தெரிவித்தார்.
எந்தவொரு வயதினருக்கும் தடுப்பூசி போடுவது முறையான அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“பல நாடுகள் ஏற்கனவே ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளன. எவ்வாறாயினும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து முடிவெடுக்க எங்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது, ஏனெனில் நாங்கள் இன்னும் அறிவியல் தரவுகளைப் பெறவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் இது குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையோ அல்லது வேறு எந்த வயதினரையோ கொவிட்-19 போன்ற அறிகுறிகள் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வைத்தியர் விஜேசூரியா கூறினார்.
“சிறுவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும்போது பெற்றோர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம் என அறிவுறுத்தப்படுகிறது, ”என்று அவர் வலியுறுத்தினார்.
“மாரவிலைச் சேர்ந்த தரம் ஆறாம் மாணவன் கொவிட்-19 காரணமாக உயிரிழந்த சம்பவத்தைப் பொறுத்த வரையில், அந்தப் பாடசாலை மாணவி உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தார். எவ்வாறாயினும், நாங்கள் இன்னும் அவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை ஆராய்ந்து வருகின்றோம்”என்று வைத்தியர் விஜேசூரியா கூறினார்.
“இருப்பினும், பிரேத பரிசோதனையில் அவர் கடுமையான நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.