2021 கல்வி ஆண்டுக்கான பரீட்சைகள் 2022 இல் நடைபெறும் தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும், இவை இரண்டு முறை பின்போடப்பட்டன.
முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும், உயர்தர பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.