உலகம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றின தலிபான்கள் – ஜனாதிபதி அஷ்ரப் கனி பதவி விலகினார்!

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த நிலையில் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காபூல் சுற்றி வளைக்கப்பட்டதால் விமானம் மூலம் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரசுப்படைகள் சரணடைந்ததால் உரிய பாதுகாப்பு தருவதாக தலிபான்கள் உறுதி அளித்தாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத்தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று ஆப்கானிஸ்தான் தலைநகரை சுற்றிவலைத்த தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டு பிரஜைகள் தமது நாட்டு அரசாங்கத்தினால் மீண்டும் பாதுகாப்பாக நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டுவருகின்றனர்.

Hot Topics

Related Articles