எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனிடையே, கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி இன்றுடன் பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.