உலகளாவிய ரீதியில் கடும் நெருக்கடிக்கு காரணமாகியுள்ள கொரோனா தொற்றிலிருந்து விடுபட உலக நாடுகள் பல கண்டிப்பான சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இதில் முக்கிய நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது இருந்து வருகிறது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கல், நாடாளுமன்ற அவையில் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார். திடீரென முகக்கவசம் அணியாதது குறித்து நினைவுக்கு வந்த அவர், பதறிப் போய் முகக்கவசத்தை வாங்கி அணிகிறார்.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்ற அவையில் அணிய, பதறி போய் முகக்கவசத்தை தேடி ஓடிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.