கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடும் நோக்கில் அனைத்து நாடுகளும் தடுப்பூசியை தமது நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பணியை துரிதப்படுத்தி வருகின்றன.
எனினும் கொரோனா தடுப்பூசி மீதான சந்தேகங்களும் அச்சங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைபவர்களுக்கு இயல்பாகவே கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி உருவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துவரும் நிலையில், தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டுமா? என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது.
இதற்கு அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் அமேஷ் அடல்ஜா விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருந்தாலும் ஒருவர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்புச்சக்தி தேவைப்படுவதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் உடல் எவ்வளவு காலம் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. நாம் தொற்று நோய் காலத்தில் இருக்கிறோம். அதை கையாள்வதற்கு வேறு சிகிச்சைகள் இல்லை.
எனவே தடுப்பூசியை பெற்றுக்கொள்வதே பாதுகாப்பான அணுகுமுறை. ஒருவர் இதனால் எந்த பக்கவிளைவையும் அனுபவிக்க மாட்டார். எனவே தடுப்பூசியை அனவைரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என மேலும் ஒரு வைத்தியர் தெரிவித்துள்ளார்.