சீனா, தனது ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது.
‘சாங்-5’ என்று பெயரிட சீன விண்கலம் நிலவில் இறங்கி கற்களை சேகரித்து பின்னர் பூமிக்குத் திரும்பும் நோக்கில் சீனாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டள்ள விண்கலம் வியாழக்கிழமை சந்திர மேற்பரப்பில் இருந்து வெளியேறியுள்ளது.
இதனையடுத்து சீனாவின் ஆய்வு மையம் நிலவில் சீனாவின் கொடி பறக்கும் காட்சியை இன்று வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் நிலவில் கற்களை சேகரித்து பூமிக்குத் திரும்பிய 3வது நாடாக சீனா இருக்கும்.
இதற்கு முன்னர் அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் மட்டுமே நிலவில் தேசியக் கொடிகளை உயர்த்தியுள்ளது.
40 ஆண்டுகளில் முதல் முறையாக சந்திர மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலவு உருவானது பற்றி அங்கிருந்து கொண்டு வரப்படும் கற்கள் மூலம் ஆராயப்படும் என்று சீனாவின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1959ல் ரஷ்யாவின் விண்கலம் முதல் முறையாக நிலவில் தரையிறங்கியது. அதன் பிறகு ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் நிலவில் விண்கலத்தை இறக்கியுள்ளன.
அமெரிக்கா தனது அப்போலோ திட்டத்தின் மூலம் நிலவில் மனிதர்களையும் இறக்கி மனிதகுலத்தின் காலடியை பதிக்கச் செய்தது. 1969 முதல் 1972 வரையில் அமெரிக்கா மொத்தம் 12 விண்வெளி வீரர்களை நிலவில் இறக்கி 382 கிலோ எடையுள்ள பாறை களையும் மண்ணையும் பூமிக்குக் கொண்டு வந்துள்ளனர்.