உலகம்

லொஸ்லியாவின் தந்தை உயிரிழந்தார் !

பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், லொஸ்லியா தற்போது இலங்கையில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா, கடந்த ஆண்டு இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின், படங்கள், விளம்பரங்கள் என லொஸ்லியா படுபிசியாக இருந்ததால், அவர் ஷுட்டிங்கிற்காக அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார்.

இந்நிலையில், லொஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

மரண செய்தியையடுத்து லொஸ்லியா மற்றும் தந்தை பிக்பாஸ் வீட்டில் சந்தித்து கொண்ட வீடியோக்களை ரசிகர்கள் ஒவ்வொன்றாக தேடி தேடி பதிவிட்டு வருகின்றனர்.

 

கனடாவில் இருக்கும் தனது தந்தைக்காக லொஸ்லியா தந்தை தின வாழ்த்துக்கள் சொன்ன வீடியோ தற்போது சமூக்வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அத்துடன் சமூகவலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் #Losliya ட்ரண்டாகி வருகிறது.

இந்நிலையில் லொஸ்லியாவின் வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் லொஸ்லியா தன்னுடைய தந்தை எவ்வளவு பிடிக்கும் ? அவர் தன்னை எப்படி பார்த்துக் கொண்டார் என்பது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

அதில், நான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேலையில் இருந்தேன், அப்போது அந்த சம்பளம் என்னுடைய தேவைக்கே சரியாகிவிடும், ஆனால் அதை எல்லாம் என் அப்பா புரிந்து கொண்டு, அவர் பணம் அனுப்பி வைப்பார்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு என்றால் உடைகள் நிறைய வேண்டும், விசா, டிக்கெட் போன்றவைகள் எல்லாம் தயார் செய்வதற்கு, வாங்குவதற்கும் அவர் அந்தளவிற்கு உதவினார்.

தற்போது நான் இருக்கும் இந்த பீல்ட் அவருக்கு பிடிக்கவில்லை, இருப்பினும் எனக்கு பிடிக்கிறது என்பதால், என்னை உற்சாகப்படுத்துகிறார், ஊக்கப்படுத்துகிறார், இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா என்று கூறி முடிக்கிறார்.

இந்த வீடியோவை லொஸ்லியாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் லொஸ்லியாவின் தந்தை மரண செய்தி தன்னை உலுக்குவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் பிரபலம் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் உயிரிழந்த நிலையில், லொஸ்லியாவுக்கு பலரும் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல இயக்குனரும், நடிகருமான சேர்ன் இந்த செய்தியை கேட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், லொஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும்.

இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா இருந்த போது அவரை தன் மகள் போன்று நினைத்து பாசத்தை காட்டினார், வெளியில் வந்த பின்பும் இருவரும் அப்பா, மகள் போன்றே இருப்பதாக கூறி வந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

அந்த வகையில், கவின் மீது கொண்ட காதல் சர்ச்சை காரணமாக லொஸ்லியா மக்களிடம் கெட்டப் பெயர் வாங்கிக் கொண்டிருந்த போது, பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த லொஸ்லியாவின் அப்பா, என்ன இது ? நான் உன்னை இப்படியா வளர்த்தேன் ? அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டு வந்துவிடு என்று மிரட்டுவார்.

அந்த கோபத்தை கவீன் மீது காட்டாமல், அவரை கட்டியணைத்து சில விஷயங்களை பேசுவார்.

இது குறித்து கமல் அன்றைய நிகழ்ச்சியின் போது, லொஸ்லியாவின் அப்பா என்னைவிட சிறந்தவர். ஒரு ஜெண்டில் மேன் போன்று நடந்து கொண்டார்.
கவீனிடம் அவர் நடந்து கொண்ட விதம், மிகவும் அற்புதம், உங்களிடம் அவர் கோபத்தை காட்டவேயில்லை, பார்க்கும் எனக்கு அப்படி இருந்தது. நான் ஒரு அப்பாவா இருந்த என்ன செய்திருப்பேனோ, அதை சிறப்பாக நடந்து கொண்டார் என்று புகழ்ந்தார்.

Hot Topics

Related Articles