கொரோனா தொற்றுப் பரவால் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு தினேஷ் கார்மேகத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா காலத்தில் குறிப்பாக சுயாதீன ஊடகவியலாளர்களின் நிலை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
பலருக்கு முன்னரை போல வெளியில் செய்தி சேகரிக்க செல்ல முடியவில்லை.
பலர் தொழிலை இழந்து வாழ்வாதார ரீதியில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் Tamil arts and media school நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் கார்மேகம் இன்று (12.05.2020) ஒருதொகை உலருணவு பொதிகளை இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திடம் வழங்கினார்.
அவை கொழும்பில் வாழும் ஊடகவியலாளர்களுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.