உலகம்

தம்புள்ளையில் விபத்து இரு பெண்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி ; இருவர் காயம்

தம்புள்ளை – ஹபரணை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
தம்புள்ளை – ஹபரணை வீதியில் மெஹஸ்வெவ என்ற பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து வேன் மற்றும் ரிப்பர் வாகனம் ஆகியன மோதி சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Hot Topics

Related Articles