வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்றுக் காலை இடம்பெற்றது.
காலை 7 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து பிள்ளையார் , முருகனுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தார்கள்.