உலகம்

இலங்கையில் பால்பண்ணை உற்பத்தியை அதிகரிக்க பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இலங்கையில் பாற்பண்ணை உற்பத்தியை அதிகரிக்க பிரஞ்சு நிறுவனமான பொக்காட்டுடன் விவசாய கிராமிய பொருளாதார விவகார கால்நடை அபிவிருந்தி நீர்பாசனம், மீன் பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

இவ்வொப்பந்தம் , இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லபேட் முன்னிலையில் , கைச்சாத்தானது.
இவ்வொப்பந்தத்தின் கீழ் பிரான்ஸ் அரசிடமிருந்து 13.9 மில்லியன் யூரோ (2514 மில்லியன் இலங்கை ரூபா ) இலகு கடன் திட்டத்தின் கீழ் கிடைக்க உள்ளதுடன், இதனை இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் மேற்பார்வை செய்யவுள்ளது.
கடுவெல, அத்தனகல , வாரியப்பொல , பொலன்நறுவை , வென்னப்புவ மற்றும் மட்டக்களப்பிலுள்ள , சிறிய பாற்பண்ணை நிறுவனங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு தரமுயர்த்தப்படவுள்ளன.
இதன்படி ஒரு நாளுக்கு 4500 லீற்றர் பால் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிலுள்ள பொக்காட் நிறுவனம் 35 நாடுகளில் 3500 ஊழியர்களை கொண்டதாகும். பொக்காட் நிறுவனம் இலங்கையில் பால் சேகரிப்பு தயாரிப்பு பொதியிடல் , மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு பயிற்சி என்பவற்றை வளங்கவுள்ளது.
இலங்கை அரசு 2020 இல் பால் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles