நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிக்கொப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இராணுவவீரர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக ஹெலிகொப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த ஹெலிகொப்டரில் விமானி உட்பட 5 பேர் பயணித்துள்ளனர்.
அந்த ஹெலிகொப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகொப்டரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.